ஞாயிறு, 28 நவம்பர், 2010

பாண்டியனின் துறைமுகம் உய்யலாலா!!!

கொற்கை, பாண்டிய ராஜ்யத்தின் துறைமுக நகரம் என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பாடப்புத்தகம் மூலம் படித்திருப்போம்.ஆனால் எத்தனை பேருக்கு அந்த ஊரின் தற்போதைய நிலை தெரியும்? கொற்கை, தற்போது ஒரு சிறிய கிராமம். நான் சிறு வயதில் இருந்து, பல முறை அந்த ஊருக்கு அருகே வரை சென்றிருக்கிறேன். ”கொற்கை - 3 கி.மீ.” என்று எழுதியிருக்கும் பலகையை பலமுறை கடந்தும், அந்த ஊருக்கு இதுவரை சென்றதில்லை.

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அந்த 3 கி.மீ. போர்ட்டை கடக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை கண்டிப்பாக அந்த ஊரில் என்ன தான் இருக்கிறது? என்று பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

போன வேலையை முடித்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எங்கே என்று கேட்டவர்களிடம், கொற்கை என்றால், அங்கு என்ன இருக்கிறது? என்பது பதில் கேள்வியாக இருந்தது. ”பழைய காலத்து ஊராச்சே, என்ன இருக்கிறது என்று பார்க்க போகிறேன்” என்றால், “அங்கு ஒன்றும் இல்லை” என்பது பதிலாக இருந்தது. இருந்தாலும், போகாமல் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அப்படி என்ன தான் அங்கு ஒன்றும் இல்லை என்று பார்க்க கிளம்பிவிட்டேன்!

---

கொற்கை முன்பு துறைமுகமாக இருந்தாலும், இன்று கடல் பக்கத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது எப்படி துறைமுகமாக இருந்தது என்பது என் பழைய ஆச்சரியம். இணையத்தில், தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களை வாசித்தப்போது சிறிது புரிந்தது. எவ்வளவு மாற்றங்கள்? இன்னும், எவ்வளவு மாறுமோ?

முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை. ஆனால், ஊரில் எந்த இடத்தை தோண்டினாலும், கடல் இருந்ததற்கு அத்தாட்சியாக சிப்பிகள், சங்குகள் கிடைக்கிறதாம்.

---



போகும் வழி, வாழைத் தோட்டங்களால் நிறைந்திருந்தது. மண் வாசம் அருமையாக இருந்தது. கொற்கைக்குள் வந்துவிட்டேன். வழக்கமான கிராமமாகத்தான் இருந்தது.

ஒரு பெரியவர் அருகே சென்று நிறுத்தி விசாரித்தேன். அவர் சொன்னது,

“பழைய காலத்து அம்பு, வில், பானை பொருட்களை காட்சிக்கு வைத்து காட்ட ஒரு இடம் இருந்தது. ஒரு ஆபிசரும் இருந்தார். ஆனா, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி, யாரும் இங்கு வருவதில்லை என்பதால் அது திருநெல்வேலிக்கு இடம் மாறியது. இப்ப, இங்க எதுவும் கிடையாது. கொஞ்ச தூரம் போனா, ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான்.”

அந்த கோவிலுக்கு வண்டியை விட்டேன். சின்ன கிராமத்து சாலை. இடது பக்கம், வழக்கம் போல் வாழைத்தோட்டம். வலது பக்கம், நீர் இல்லாத குளம் போல் இருந்தது.



சிறிது தூரத்தில், வாழைத்தோட்டத்துக்கிடையே, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்வாறு, ஒரு சிறிய வளைவு இருந்தது. அதில் “பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம்” என்று எழுதியிருந்தது. இதிலேயே ‘பழமையான’ என்று எழுதியிருந்தாலும், இந்த வளைவே ரொம்ப பழமையாக இருந்தது! வளைவின் இரு பக்கமும் பாண்டிய ராஜ்ஜியத்தின் சின்னமான மீன் இருந்தது.


உள்ளே இருந்த கோவில், மதிய நேரமென்பதால் சாத்தியிருந்தது. சிறிய கோவில் தான்.


வாசல் முன்பு, தோட்டத்தில் வேலை செய்பவர்கள், மதிய உணவருந்திக்கொண்டிருந்தனர். பிரதான வாசல் மூடியிருந்தாலும், வலது பக்கம் கோவில் வளாகத்திற்குள் நுழைய ஒரு வழி இருந்தது. இதை முன்னால் இருந்தவர்கள் சொன்னார்கள்.


ஏரியாவே அமைதி. கோவிலுக்குள் இன்னமும் அமைதி. பசுமை சூழ்ந்த ஒரு கோவிலுக்குள், அமைதியான சுழலில் நான் மட்டும். புராதன கோவில் என்று சொல்ல முடியாது. சிறியதாக இருந்ததை சுற்றி எழுப்பியிருக்கலாம். முன்பக்க சுவர் முழுக்க, கல்வெட்டுக்கள்.


பின்புறம் ஒரு பாதி மரம் இருந்தது. கேட்க கேள்விகள் நிறைய இருந்தாலும், பதில் சொல்ல ஆளில்லாததால், கேள்விகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.





---


திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு பாட்டி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசினேன். அவர் குளம் போல் இருந்ததை காட்டி, இது தான் பாண்டிய காலத்தில் தோணித்துறையாக இருந்ததாக நம்பிக்கை என்றார்.


அதனுள் ஒரு கோவில் இருந்தது. அம்மன் கோவில். பாட்டி இந்த கோவிலும் பழமையானது என்றார். ஆனால், பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. நான் போன நேரம், இந்த கோவிலும் பூட்டி கிடந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.


கோவில். கோவிலைச் சுற்றி தண்ணீர் இல்லாத குளம். ஒரு பெரிய மரம். மரத்தடியில் பெண்கள் கூட்டம் ஒன்று உட்கார்ந்து ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள். மரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த ஊரில் 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு வன்னி மரம் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், அதை நான் பார்க்க, கேட்க மறந்துவிட்டேன். ஒருவேளை, பார்த்திருக்கலாம். வன்னி மரம் எதுவென்று தெரியாததால், உறுதி செய்ய முடியவில்லை.

---

”என்னடா, கொற்கை பார்த்தியா? என்ன இருந்துச்சு?”

“முன்ன, ஒரு ஆபிசரும் பழைய காலத்து பொருட்களும் வச்சிருந்தாங்களாம். இப்ப, யாரும் வருறது இல்லன்னு, திருநெல்வேலிக்கு கொண்டு போயிட்டாங்களாம்.”

“ஆமா! இப்ப யாரு அதையெல்லாம் பாக்குறா? தமன்னா வந்திருக்கா’ன்னு சொல்லு, எங்கிருந்துனாலும் ஓடி வருவானுங்க!”

---

செல்லும் வழி - தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறினால், முக்காணியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் இருக்கும். மினி பஸ் இருக்கும் என நினைக்கிறேன். முக்காணி வழியில் ஏரல் செல்லும் பஸ்ஸில் ஏறினால், உமரிக்காடு என்னும் ஊரில் இறங்கி செல்லலாம்.
********************** 
திருடன் கையில் சாவி!!!!!!!!!!!
முக்கியமான தகவல்
இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.


http://www.saravanakumaran.com/
இத அவரே தான் சொல்லியிருக்காரு
***
எனது மறுமொழியும் அவரின் பதிலும் 

சு.மருதா said...

மூவேந்தர்களின் துறைமுக நகரங்களில் தொண்டி'ய அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததால் பார்த்துவிட்டேன்.உம்மால் இன்று யாம் எமது கொற்கையை கண்ணுற்றோம் மிக்க நன்றி,அப்பிடியே கொஞ்சம் முசிறி பக்கம் போன ஒரு பதிவு எழுதிருங்க!!!!!

சரவணகுமரன் said...

நன்றி மருதா. முசிறி பற்றிய தகவலுக்கு நன்றி.
குடிலுக்கு சொந்தக்காரருக்கு நன்றி!!!!!




.

அன்பிலும்....,ஏழையின் சிரிப்பிலும்....,!!!

கடவுளும், நானும்



எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேர்ந்தது கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்ற அம்மாவின் அழைப்பு. தீவிர ஆத்திகனாக இல்லாத போதும் ஆலயங்களுக்குச் செல்வது எனக்கு எப்போதுமே உறுத்திக் கொண்டிருக்கும் நிகழ்வு. அங்கு செல்வதால் மன அமைதி கிடைக்கும் என்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. கோயிலின் திருவிழாக்காலத்தில் மட்டும் உடன் வர அழைப்பதால் நானும் செல்வது வழக்கமாகிவிட்டது. அம்மாவை கோவிலில் விட்டு விட்டு அங்கு இருக்கும் கடைத்தெருக்களில் சுற்றி அப்பளம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது உள்ளே எனக்கான அர்ச்சனை நடந்து கொண்டிருக்கும்.



திருவிழா என்றுமே அழகானதுதான். கொளுத்தும் வெயில் காலத்தில் ரோட்டை மறைத்துப் போடப்பட்டிருக்கும் பந்தலில் கீழே, கடந்து செல்லும்போது வீசும் சிலநொடி தென்றலுக்காகவே அவ்வழியில் செல்வதுண்டு. குடும்பம் சகிதமாக கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தருணங்கள் மக்களுக்கு வாய்ப்பது திருவிழாக் காலங்களில்தான்.

ஆனால் நமது பார்வையில் திருவிழா ஒரு வித்தியாசமான ஒன்றுதான். அலுவலகத்தின் அருகிலேயே கோயில் இருப்பதால் செல்லும் வழியில் திருவிழாக்கூட்டத்தின் கலர்களைப் பார்ப்பது காலைப்பணிகளில் ஒன்றாகி விட்டதால் அங்கு மட்டும் வண்டியின் வேகம் குறையும். ஆனால் உடன் வரும் உத்தமர்கள் கோயிலின் முன் வந்ததும் கையை விடுத்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். அப்போது எதிர்பாராமல் எதிர்ப்படுபவர் மீது இடித்து விட்டால் அவ்வளவுதான். அவர்கள் பக்தியின் வீரியம் வாய் வழி வெளிப்பட்டு விடும்.

மஞ்சள் நீர் ஊற்ற வரிசையில் நிற்கும் போது 'எதற்காகவும் இவ்வளவு நேரம் நின்றதில்லை' என்பதுதான் என் பேச்சாக இருக்கும். முன் பின் நிற்கும் சில பெண்கள் கால் வலியினால் காலை மாற்றி மாற்றி ஒற்றைக்காலில் நிற்கும் போது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வாங்கிக் கட்டியுமிருக்கிறேன்.


அன்றும் எப்போதும் போல, கட்டாயப்படுத்தி கோவிலினுள் அழைக்காமல் அவர் மட்டும் செல்ல திருவிழாக் கடைத்தெருவில் மெல்ல நுழைந்து சென்றுகொண்டிருந்தேன். அன்று வெயிலின் தாக்கம் மிகுவாய் ஓங்கியிருந்தது. ஆங்காங்கு குளிர்பானக் கடைகளும், பழக்கடைகளும் தென்பட்டாலும் மனது கரும்புச்சாறு அரைக்கும் கடையைத்தான் தேடியது. கரும்புச்சாறு குடிக்கும்போது ஏற்படும் உடலுக்கும் மனதுக்குமான குளிர்ச்சி வேறுவகையான குளிர்பானங்கள் தராது என்பது உண்மைதான். அலுவலகத்திலும் தேநீருக்குப் பதிலாக இதை வாங்கிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ஒரு தம்ளர் வாங்கிக் குடித்ததும் வெயில் சிறிது நேரம் கண்களுக்கு இதமாகத் தெரிந்தது.

வீட்டிற்கு வாங்கிச்செல்வதற்காக தீர்ந்து போன தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு காத்திருந்தேன். மெதுவாய் கையை பிடித்து அண்ணா... அண்ணா... என்று ஒரு சிறுமி இழுத்துக் கொண்டிருந்தாள். முற்றிலுமாக பழுப்பேறிய தலைமுடியுடன், வியர்வையில் நனைந்திருந்தாள். ஒருவிதமான கரகரத்த குரலுடன் அவள் அழைத்த தொனியே மனதைக் குடைந்தெடுத்தது. கையிருக்கும் பத்தையைா இருபதையோ திணித்து விட்டு சென்றிருக்கலாம். ஏதோவொன்று தோன்ற கையில் வாங்கிய கரும்புச்சாற்றை அவளிடம் தந்து விட்டு நகர்ந்தேன்.

கோவிலுனுள்ளே சென்ற அம்மா திரும்பிவர, அவர்களுடன் கடைத்தெருவில் சுற்ற ஆரம்பிக்கும்வரை நினைவில் அகலாமலிருந்தது அந்த சிறுமியின் முகம். சிறுவனாய் நான் அடம்பிடித்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய கடைத்தெருவில் இன்று அவள் கடவுள் உருவம் பொறித்த கழுத்தணிகளை வாங்கிக் கொண்டிருந்தாள். எனக்கும் ஒன்று தர மெலிதாய் சிரித்து அணிந்து கொண்டேன்.

வீட்டிற்குச் செல்ல வண்டியை கிளப்பிய சமயம், சாலையோர சுற்றுச் சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாள் அச்சிறுமி. அவளைவிட வயதில் சிறிய குழந்தை ஒன்றிற்கு கரும்புச்சாற்றை ஊட்டிக்கொண்டிருந்தாள். குடிக்கும் போது, வெயிலில் கருத்த அக்குழந்தையின் கழுத்து வழி வழிந்து கொண்டிருந்தது கரும்புச்சாறு. 

ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".








 



சனி, 27 நவம்பர், 2010

இவரு தான் இந்த பிளாக் எழுத இன்ச்பிரேசன்!!!!!


உன்னைவிட நல்லவன்?


ஒருவர் இறந்த பின்னர் மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். குரு தன் சீடரை அழைத்து,
நீ சென்று இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்று பார்த்துவா என்றார்.

திரும்பிய சீடர், குருவிடம் சொன்னார்.

குருவே இறந்தவர் சொர்கத்துக்குத் தான் செல்கிறார் என்று.

குருவைப் பார்க்க வந்த ஒருவர் இதனைப் பார்த்து வியப்படைந்தார்.
ஒருவர் இறந்தபின்னர் சொர்க்த்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்பதைப் பார்க்கமுடியுமா? என்று குருவிடம் கேட்டார்.

குரு சொன்னார்,

ஒருவரின் இறுதி ஊர்வலமே இறந்தவரின் வாழ்க்கைக்கான அடையாளம். அவர் நல்லவரா? தீயவரா? என்பதை அவருக்குப் பின் செல்லும் மக்கள் பேசிச் செல்வர். அவர்கள் இவரைப் பற்றி உயர்வாகப் பேசினால் இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறார் என்றும், அவரைப் பற்றி இழிவாகப் பேசினால் அவர் நரகத்துக்குப் போகிறார் என்றும் உணர்ந்து கொள்ளலாம் என்றார் குரு.

சொர்க்கம்,நரகம் இரண்டும் மனித நம்பிக்கையின், நெறி்ப்படுத்தும் முயற்சியின் அடையாளங்கள்.

பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!

பாரதியார் நல்லவரா? தீயவரா?

பாரதி சொர்க்கத்துக்குச் செல்வாரா?
நரகத்துக்குச் செல்வாரா?

பாரதி நல்லவர் தான்! அவர் சொர்கத்தில் தான் வாழ்கிறார்.
ஆம் இன்னும் அவரின் சிந்தனைகள் மறையவில்லையே.
மக்களின் மனம் என்னும் சொர்க்கத்தில் தானே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி நல்லவர் தீயவர் என்பதற்கான வரையறை நிலையானதல்ல.

நல்ல பண்புகளைக் கொண்ட ஒருவரை தீயவராக எண்ணுதலும்
தீய பண்புகளைக் கொண்ட ஒருவரை நல்லவராக எண்ணுதலும் இவ்வுலகத்தின் இயல்பு.

ஒருவரின் மரணத்தி்ன் பின்னரே அவர் நல்லவர், தீயவர் என்பதை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வர்.


கரிகாலன் சேரலாதனைப் போரில் வென்றான்.
சேரலாதன் தன் மார்பில் தைத்த வேல் முதுகு வழியே வந்ததால் புறப்புண் என நாணி வடக்கிருந்தான்.

இருவரில் யார் நல்லவர்?

இதனை உணர்த்துகிறது இப்பாடல்,

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

66. புறநானூறு.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை : அரச வாகை.


நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே!

மதங்கொண்ட ஆண்யானையை உடைய கரிகால் வளவனே!

போருக்குச் சென்ற நீ ஆற்றல் தோன்ற வெற்றி கண்டாய்!

புதுவருவாயையுடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தில் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பி, புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் உன்னை விட நல்லவன் அல்லவா?


பாடல் உணர்த்தும் கருத்து.


­1. அரசனின் இயல்பு கூறும் அரசவாகை என்னும் புறத்துறை சுட்டப்படுகிறது.

­2.காற்றினை ஏவல் கொண்டு மரக்கலத்தைச் செலுத்தியும், காற்றில்லாதபோது அதனைத் தம் ஆளுகைக்கு உட்படுத்தி மரக்கலத்தைச் செலுத்தும் சோழரின் மாண்பும்,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

என்னும் அடிகளால் உணர்த்தப்படுகின்றன. இதனால் பழந்தமிழரின் கடல் வணிகமும், கப்பல் செலுத்தும் அறிவும், ஆற்றலும் புலப்படுகின்றன.
­
3. எல்லா வெற்றியும் வெற்றியல்ல!
எல்லாத் தோல்வியும் தோல்வியல்ல!
ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் ஒரு தோல்வி உள்ளது!
ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றியுள்ளது!

என்னும் அறிய வாழ்வியல் தத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.


4.போரில் வென்ற சோழனின் வெற்றியை விட,

போரில் தோற்றாலும் மானத்துக்கு அஞ்சி உயிரைவிட எண்ணும் சேரலாதன் நல்லவனாகப் புலவர் கண்ணுக்குப்படுகிறான்.

இப்புலவர் சொல்கிறார் கரிகாலனே நீ நல்லவனே!
ஆனால் உன்னைவிட நல்லவன் சேரன்!

என்று.

5.வாழும் போது நம்மை யார்யாரே நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்வார்வகள்.

நாமும் நம்மைப் புகழும் போது அகமகிழ்ந்தும், இகழும் போது வருந்தியும் வாடுவோம்.

நாம் நல்லவர் என்பதும் தீயவர் என்பதும் அவர்களின் வார்த்தையிலில்லை.
நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறதே என்னும் வாழ்வியல் நுட்பமே இப்பால் உணர்த்தும் கருத்தாக அமைகிறது.